Monday, October 24, 2005

 

எங்கேயோ படித்தது...

சமீப காலமாக ATM குற்றங்கள் அதிகரித்து வருவதாக வெவ்வேறு நளிதழ்களில் படித்து வருகிறோம் - குறிப்பாக பெங்களூரில். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் இருசக்கர வாகனங்களில் போவோரை அல்லது ஆட்டோவில் போவோரை வழிமறித்து அவர்களை மிரட்டி கையில் சிக்குவதை எடுத்துக்கொள்வதுடன் அவர்களிடம் வங்கி பற்றட்டை (Debit Card) இருப்பின், அவர்களை அருகே இருக்கும் காசாளும் தானியங்கி இயந்திரத்திலிருந்து (ATM- என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?) அவர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுக்கச் சொல்லி அதனை எடுத்துகொண்டு பறந்துவிடுவதாக கேள்வி. அப்படி அவர்கள் கைகளில் சிக்கியவர்களும் உயிருக்கு பயந்து வேறு வழியின்றி அவர்கள் சொற்படி நடக்கவேண்டியிருக்கிறது.

இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க/தவிற்க ஒரு அருமையான யோசனையை எங்கேயோ படித்திருக்கிறேன். அதாவது, வங்கிகள் பற்றட்டையைக் கொடுக்கும் போது ஒன்றிற்கு பதிலாக இரண்டு நான்கிலக்க திறவுகோல்களை (PINs) கொடுக்கவேண்டியது. அவற்றில் ஒன்று நாம் வழக்கமான உபயோகத்திற்கும் மற்றொன்று மேற்கூறியது போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கும். இந்த இரண்டாவது திறவுகோலைப் பயன்படுத்தினால் அந்த காசாளும் இயந்திரம் உடனே வங்கிக்கும் காவல் துறைக்கும் இதைத் தெரிவிப்பதாகவும், எடுக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு சிறிய சங்கேத முத்திரையை பதிக்கின்றார் போலவும் மென்பொருளை அமைத்துவிட்டால் இப்படி குற்றங்கள் புரிபவர்களை சுலபத்தில் பிடித்துவிடமுடியும் என்பதே அந்த யோசனை.

இதனை மேலும் ஆராய்ந்து இத்திட்டத்தில் ஏதேனும் ஓட்டைகளோ சிக்கல்களோ இருப்பின் அவற்றை கண்டறிந்து சரி செய்து வங்கிகள் நடைமுறைப் படுத்தலாம் என்று தோன்றுகிறது. சரி தானே ?

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது